மேற்குவங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
இறுதி நாளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதற்கட்டத் தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 478 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 3.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேற்கு வங்கத்தில் முன்னேப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 29 அன்று 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
















