மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இவர்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 75 லட்சம் பேர் பெண்கள் மற்றும் 465 பேர் மூன்றாம் பாலினத்தவர்களாக உள்ளனர். பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க மொத்தம் 44 ஆயிரத்து 376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் பாதுகாப்பிற்காக 2 ஆயிரத்து 450 துணை ராணுவப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
















