சென்னை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் விதிகளை மீறி திமுகவினர் வாக்குச்சாவடிக்குள் நுழைவதாக தவெக-வினர் குற்றம் சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தவெக வேட்பாளர் சினோரா அசோக், அங்கிருந்த திமுக நிர்வாகிகளைத் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தவெக கூட்டணி கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு திமுக வேட்பாளரும், அமைச்சருமான சேகர்பாபு சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நேருக்கு நேர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது சினோரா அசோக்கை சேகர்பாபு ஆதரவாளரகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பதற்றமான சூழல் நிலவியதால் அங்கிருந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















