தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை - பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!
Jun 21, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 1, 2026, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் வெளுத்து வாங்கிய கனமழையால் ரயில்வே சுரங்கப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக ஏத்தகோவில் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால் அவ்வழியே மிகுந்த சிரமத்துடன் வாகன ஓட்டிகள் பயணம் செய்தனர். எனவே, அப்பகுதியில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் அரசு பள்ளியின் உள்ளே இருந்த மரம் முறிந்து விழுந்தது. தொடர்ந்து சாலையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் மின்சார துண்டிப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பழனி மலைக்கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் தண்ணீர் கொட்டியது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பலத்த சூறைக்காற்றுயுடன் கூடிய கனமழையால் சாய்ந்து விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது.

கல்லிடைக்குறிச்சி குமாரகோவில் தெற்கு ரத வீதியில் உள்ள பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்து அப்பகுதியில் செல்லும் மின் வயர் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags: chennai metrological departmentraintamilnadu rainrain updateweather update
ShareTweetSendShare
Previous Post

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

Next Post

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies