கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் கருத்தை திணிக்கின்றனர் என்றும், அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சரும், சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள் மத்தியில் தவெக தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான் என்றும், ஆனால், வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தாக்கத்தை உருவாக்கவில்லை எனவும் கூறினார்.
வெற்றி பெறும் அளவுக்கு தாக்கம் இல்லாததால் அதிமுக வெற்றி பெறும் எனக்கூறிய அவர், திமுக அடுத்த இடத்திற்கு வரும் என தெரிவித்தார்.
மேலும், மாற்றத்திற்கான வாக்குகள் இரட்டை இலைக்கு பதிவாகி உள்ளது என்றும், என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
















