தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் தவெக முன்னிலை என சூதாட்ட கும்பல் வதந்தி பரப்புவதாக தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பு திமுகவை வைத்து சூதாட்டம் நடத்தினார்கள் என்றும், வாக்குப்பதிவுக்கு பிறகு தவெகவை வைத்து சூதாட்ட காய்களை நகர்த்துகின்றனர் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் ஏமாந்து போவார்கள் எனறும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
















