118 பேர் ஆதரவு அளிப்பதற்கான ஆவணங்களை அளித்தால் உடனடியாக ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படும் என மக்கள் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
ஆளுநர் அழைப்பின் பேரில் மீண்டும் இன்று தவெக தலைவர் விஜய் அவரை சந்தித்தார். அப்போது, 112 MLA-க்களை வைத்து நிலையான அரசு அமைக்க முடியுமா? என்றும், வேறு எந்த கட்சிகள் தவெக அரசை ஆதரிக்கும்? என்றும், பதவியேற்ற பின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என எப்படி நம்புகிறீர்களா? என ஆளுநர் கேட்டதாக தெரிகிறது.
















