தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேசுவதற்கு ஆளுநருக்கு உரிமை இருப்பதாக அதிமுக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியதற்கு பதிலளித்துள்ள இன்பதுரை, ஆளுநருக்கான அதிகார வரம்பில் சட்டத்தில் அரசியலமைப்பு 164 படி ஆளுநராக செய்து முடிக்க வேண்டிய பணிகளை செய்தாக வேண்டும் என்ற அவசியம் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் ஆர்டிக்கல் 163 இன் படி ஆளுநர் தனிப்பட்ட முறையில் சிந்தித்து முடிவெடுப்பதற்கான அங்கீகாரம் இருக்கிறது என்றும், அதன்படியே ஆளுநர் தவெக தரப்பிடம் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க கூறியுள்ளார் என்றும் அதிமுக எம்பி இன்பதுரை தெரிவித்துள்ளார்.
















