பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பாக சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தவெக, காங்கிரஸ் மற்றும் ஐயுஎம்எல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு கூட்டணி மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக ஆலோசனை நடைபெற்றது.
பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
















