கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 57-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 71 ரன்களும், ரிங்கு சிங் 49 ரன்கள் அடித்தனர். இதையடுத்து 193 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய ஜேக்கப் பெத்தேல் 15 ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் விராட்கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
60 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அசத்தினார். முடிவில் பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் அடித்தது. இதன் மூலம் கொல்கத்தா அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது.
















