டெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவை அமைச்சர்களின் மாநாடு இன்று தொடங்குகிறது.
பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் பிரிக்ஸ் வெளியுறவை அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவை அமைச்சர்கள் டெல்லி வந்தடைந்தனர்.
2024 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பில் ஈரான் இணைந்த பிறகு நடைபெறும் முக்கிய கூட்டம் என்பதால் போர் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் அனைத்து வெளிநாட்டு அமைச்சர்களும் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச உள்ளனர்.
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரதான உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னோட்டமாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது….
















