தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக அருண்ராய், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அருண் தம்புராஜ், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநராகவும், தமிழ் வளர்ச்சி துறையின் கூடுதல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட ஆட்சியராக இளம் பகவத்தை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல்துறை செயலாளராக உமாநாத் ஐஏஎஸ், சுற்றுலாத்துறை ஆணையராக எம்.எஸ்.சண்முகம் ஆகியோரும்
தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் தலைமைச் செயலாளராக விஜயகுமாரையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது…. இதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை பயிற்சி மையத்தின் டிஜிபி-யாக ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ்குமாரையும் பயிற்சி மையத்தின் கூடுதல் இயக்குநராக செந்தில் வேலனையும் நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















