திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவை கலைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி அருகே கொலை செய்யப்பட்டார்.
வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், இவ்வழக்கை விசாரிக்க, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்த போலீசாரை, அவரவர் பணியாற்றிய இடத்துக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, சிறப்பு புலனாய்வு குழு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
















