முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசில் பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் விநியோகம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், என். ஆனந்த்திற்கு, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறையும், ஆதவ் அர்ஜுனாவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருண்ராஜ்க்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும்
செங்கோட்டையனுக்கு நிதித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெங்கட் ரமணனுக்கு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையும்,சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜ் மோகனுக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. டி.கே. பிரபுவிற்கு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறையும்,
கீர்த்தனாவிற்கு தொழில் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
















