தமிழக சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில், மதுரையை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக 12 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், குறிப்பாக சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கும் மிகப்பெரிய அளவில் பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறு முறைகேடாகவும், குதிரை பேரம் நடத்தியும் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளதால் தமிழக சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்றும், அது முடியும் வரை தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















