திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியின் போது மின்சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம், மின் உற்பத்தி கழகம் ஆகிய நிறுவனங்களில் கடந்த பிப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டெண்டர்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்த பணிகளுக்கு புதிதாக டெண்டர் கோரி, முப்பது சதவீதம் குறைவாக விலைப்புள்ளி பெற்று, பணி ஆணை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
















