கோவையில் நடந்த பாஜகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை பீளமேடு பகுதியில் பாஜகவின் உயர்மட்ட மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச். ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கூட்டணி கட்சிகளின் செயல்பாடு மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த புதிய அமைப்பு மாற்றங்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிகளவில் இணைக்கும் திட்டங்கள், கட்சியின் தரைமட்ட செயற்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
















