மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார். இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் உடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் நான்கரை மணி நேரமாக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல நமது அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், கடந்த 12 ஆண்டுகளில் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில் போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு உட்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















