டெல்லியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், அவர் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக எட்டியுள்ள 22 புள்ளி 22 சதவீத வாக்குச் சதவிகித உயர்வு, கட்சியின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால அரசியல் உத்திகள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
















