பிரதமர் மோடி அமெரிக்க வருமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார்.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவுக்கு வந்த அவர் அங்குள்ள மிஷனரிஸ் ஆப் சேரிட்டி தலைமையகம் மற்றும் அந்த அமைப்போடு தொடர்புடைய குழந்தைகள் இல்லத்தைப் பார்வையிட்டார்.
14 ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் கொல்கத்தாவிற்கு சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து, தனது மனைவி ஜினெட் ரூபியோ மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஆகியோருடன் டெல்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார்.
அப்போது இருநாடுகளின் உறவு குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பின்னர் டெல்லியில் அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டடத்தை மார்கோ ரூபியோ திறந்து வைத்து உரையாற்றினார்.
ரும் மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இன்னும் பல உற்சாகமான மற்றும் புதிய அறிவிப்புகளை அமெரிக்கா வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அணுகுமுறையில் இந்தியா எவ்வளவு முக்கியப் பங்காற்றுகிறது என்பதற்கான அடையாளமாகவே குவாட் கூட்டத்தை இந்தியாவில் நடத்த விரும்பியதாகவும் மார்கோ ரூபியோ கூறினார்.
















