அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஒரே நேரத்தில் மிக வலுவான உறவைக் கொண்டுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜெய்சங்கர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் முக்கிய நோக்கம் என்றார். இந்தியா மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை குறைய வேண்டும் என இந்தியா விருப்புவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
உக்ரைன் போரிலும் ரஷ்யா, ஐரோப்பா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய அனைத்து தரப்புடனும் இந்தியா வலுவான உறவை நிர்வகித்து வருவதாக சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், பல்வேறு நாடுகளுடன் ஒரே நேரத்தில் இணக்கமான உறவைப் பேணும் ‘மல்டி அலைன்மென்ட்’ கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாக குறிப்பிட்டார்.
















