அதிமுகவில் தொடர்வதா அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
எஸ்பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி இல்லம் சென்றபோது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செல்லவில்லை. ஆதரவாளர்களிடம் கருத்தை கேட்ட பின்னர் சி.விஜயபாஸ்கர் இறுதி முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள இல்லத்தில் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது அதிமுகவில் தொடர்வதா அல்லது தவெகவில் இணையலாமா என்பது குறித்து அவர்களிடம் விஜயபாஸ்கர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
அதில் பெரும்பாலானோர் தவெகவில் இணையலாம் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் தன்னுடைய நிலைப்பாடு குறித்து நாளை மாலை விஜயபாஸ்கர் அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது,
இதன் இடையே மக்கள் முடிவே தமது முடிவு என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கட்சியை கடந்து தொகுதி மக்கள் தமக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.
















