தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆட்சியராக மாலதி ஹெலனும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளிணியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் ஆட்சியராக சிவகுரு பிரபாகரன், பெரம்பலூரில் சரண்யா அரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆளுநரின் முதன்மை செயலராக இருந்த கிர்லேஷ் குமார் வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
















