டெல்லி பயணத்தின் போது முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவல் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, பயணத் திட்ட விவரங்கள் அதிகாரிகளுடன் முழுமையாக பகிரப்படாததே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இரண்டு நாள் பயணமாக கடந்த 27-ம் தேதி டெல்லி சென்றார். அன்று மாலை, பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அவர் சந்தித்தார். ஆனால், பிரதமர் மோடியுடனான முதலமைச்சரின் சந்திப்பு, மிகக் குறுகிய நேரத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் திட்டமும் பலமுறை மாற்றப்பட்டதால், அந்தச் சந்திப்பு இறுதிவரை நடைபெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தலைமை செயலாளர், தனிச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு, முதலமைச்சரின் முழு பயணத் திட்டம் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, டெல்லி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
















