திருவள்ளுவரின் சிந்தனைகளும், வாழ்வியல் முறைகளுமே சனாதனம் என தமிழக ஆளுநர் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், தமிழாகரர் சாமி தியாகராஜன் நினைவு விருதை, அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பலராமனுக்கு வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேக்கர், சனாதனம் என்பது காலத்தைக் கடந்த வாழ்வியல் முறை என தெரிவித்தார்.
மேலும், சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட திருவள்ளுவரின் முன் தலைவணங்க வேண்டிய நிலை இருப்பதே அவரது பெருமை என்றும் அவர் புகழாரம் சூட்டினார். அத்துடன் திருவள்ளுவரின் போதனைகள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவையாக இருப்பதால், அவரை சனாதன பாரம்பரியத்தின் சீடர் என அழைப்பதில் தவறில்லை எனவும் ஆளுநர் அர்லேக்கர் தெரிவித்தார்.
















