சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் 18 வயதான யான்சி என்ற இளம்பெண்,இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்தார். தோழியை பார்ப்பதற்காக சென்னை வந்த யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு மது அருந்திவிட்டு நடனமாடியபோது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரையும் பவுன்சர்கள் வெளியேற்றிய நிலையில், சாலையில் வந்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி மீது, திமுக கொடி கட்டி வந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த சுமன் சக்திவேல் என்பவரின் கார் வேகமாக மோதியுள்ளது.
இதில், யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவருடன் வந்த சிறுமி படுகாயமடைந்தார். சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















