எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறி தனமாக விஜய் பேசியுள்ளார் என அதிமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதுமா? என கேள்வி எழுப்பியுள்ளது.
தவெக ஆட்சியில் நடந்த குற்றங்கள், மரணங்கள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட விஜயின் முகத்திலோ, பேச்சிலோ கவலை தெரிந்ததா? எனவும்
அவற்றை சரிசெய்ய வேண்டும் என்ற பொறுப்பு தெரிந்ததா? எனவும் வினவியுள்ளது.
கத்தி பேசினாலோ, கத்தி பட டயலாக் modulation-ல் பேசினாலோ பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? என கூறியுள்ள அதிமுக ஐ.டி விங்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்த தொடங்கிய குதிரை பேரத்திற்கு அமமுக எம்எல்ஏ கையெழுத்து வீடியோவே சாட்சி எனவும் குறிப்பிட்டுள்ளது.
நீங்கள் கோட் போடுங்கள் அல்லது போயஸ் கார்டனில் வீடு கூட வாங்குங்கள், யார் கவலைப்பட்டா? எனவும்
உலகமே தங்களை சுற்றியே இயங்குவது போல் நசநசவென்று புலம்பிக்கொண்டு இருக்காதீர்கள் எனவும் அதிமுக ஐ.டி விங் பதிலடி கொடுத்துள்ளது..
















