மிக விரைவில் கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறை கொள்கையை முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் கிராமத்தில் உள்ள ஜேபிஆர் தொழில்நுட்ப கல்லூரியில் மாநில அளவில் 13 வயது உட்பட்டோருக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஒழிக்க சட்டரீதியான பணிகள் மேற்கொண்டாலும், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு செல்வதை தடுக்க விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
கல்வித்துறைக்கும் விளையாட்டு துறைக்கும் நீண்ட இடைவெளி உள்ளது எனக்கூறிய அவர், இதனைப் போக்க ஆய்வு அறிக்கையை தயார் செய்யப்பட்டு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மிக விரைவில் கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறை கொள்கையை முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.
















