சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் உட்பட 75 சதவீத கவுன்சிலர்கள் இன்னும் சட்டப்படி சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என RTI மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 2ஆம் தேதியிட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி அளித்துள்ள பதிலில், சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களில் வெறும் 43 பேர் மட்டுமே தங்களது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2022 முதல் சொத்து மற்றும் கடன் விவரங்களை சமர்ப்பிக்காத 157 கவுன்சிலர்களில் நான்கு பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும், 2 பேர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் விதிகளின்படி மேயர் மற்றும் துணை மேயர் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்களுடைய சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என்றும்,
தேர்தலுக்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் காலத்திற்கு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையையும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி மேயர், துணை மேயர் உட்பட ஒவ்வொரு கவுன்சிலர்களும் பதவியேற்ற 90 நாட்களுக்கு சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என ஆர்டிஐ தகவலில் வெளியாகியுள்ளது.
















