திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகள் வணிக நோக்கம் கொண்டவை என, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அமைச்சர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விஐபி தரிசன முறையை தவிர்த்து பொது வழி வரிசையில் அமைச்சர் ரமேஷ் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களோடு ஒன்றாக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அவர், பழனி கோயிலில் பல்வேறு செயல்பாடுகள் வணிக ரீதியாகவும், வியாபார நோக்கத்தோடும் செய்யப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
















