திண்டுக்கல்லில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆய்வுக்கூட்ட மேடையில் அமைச்சர், அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், தவெக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச்செயலாளர் தர்மராஜ், அமைச்சர் இருக்கைக்கு அருகே, அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். மேலும், அவருடன் வந்த தவெக நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். அரசுப்பொறுப்பில் இல்லாத தவெக நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டத்தில பங்கேற்றது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















