பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி செல்கிறார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய், பகல் 11 மணியவில் டெல்லி சென்றடைகிறார். அதன்பின்னர், தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது மத்திய அமைச்சர்கள் சிலரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி ஆயோக் கூட்டம் முடிவடைந்ததும் வரும் வெள்ளிக்கிழமை முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.
















