மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, அவர் ஏற்கனவே வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, அப்பதவிக்கான தேர்தலில் போட்டியிட தவெக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் 12 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி, எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
நாடாளுமன்றத்தில் கூட்டணியின் குரலாக தனது குரல் இருக்கும் என, பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
















