தமிழகத்தில் உள்ள கோயில்களில் பூஜை பொருட்களின் விற்பனையை ஒழுங்குபடுத்த இந்து சமய அறநிலையத்துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற கடைகளில் மட்டுமே பூஜை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பூஜை பொருட்கள் தரமானதாகவும், சுகாதாரமான முறையிலும் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பொருட்களுக்கும் விலைப்பட்டியல் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள அறநிலையத்துறை,
பக்தர்களிடம் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், விதிமுறைகளை மீறும் கடைகளின் அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
















