அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் பரஸ்பர பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பப் பகிர்வு, கூட்டு ராணுவப் பயிற்சிகள் மற்றும் வியூக ரீதியிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறைகளில் இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாகவும், இரு நாடுகளின் கல்வி, கலாச்சாரம் மற்றும் தொழில்முறை சார்ந்த மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
















