முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிராக மூன்று தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்து, வாக்காளர் சிவராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர் மரிய வில்சன் வெற்றிக்கு எதிராக வாக்காளர் மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதேபோல, திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி வெற்றியை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் விஸ்வநாதன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
















