சி.விஜயபாஸ்கர் குறித்து விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு, அவரது ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த நிலையில், புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தவெகவில் சி.விஜயபாஸ்கர் இணைந்தால் அதனை முழு மனதுடன் வரவேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதரவாளர்கள், விஜயபாஸ்கர் குறித்து விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கண்டனம் தெரிவித்தனர். விஜயபாஸ்கர் தனது சொத்துக்களை ஒப்படைக்குமாறு கூறுவதற்கு உதயகுமார் யார்? என்றும் கேள்வி எழுப்பினர்.
















