தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையத்தில். கடந்த பட்ஜெட்டில் தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சிக்காக ரூ.7,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது என்றும்,சிறுகுறு வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் முத்ரா திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நாங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பாஜகவின் கட்டமைப்பு மற்றும் சித்தாந்தம் மாநிலம் முழுவதும் பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
அடுத்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனது சொந்த பலத்தில் மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
















