யோகாவை நமது தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டால், உடலளவில் தகுதியுடனும், மனதளவில் விழிப்புடனும் இருக்க முடியும் என, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.
மதுரை வேலம்மாள் பள்ளிகள் குழுமம் சார்பில் 12-வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, வேலம்மாள் குளோபல் பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தில், ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற தலைப்பில் யோகா பயிற்சி நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஐந்து வேலம்மாள் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3,300 மாணவர்கள் மற்றும் 200 பணியாளர்கள் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு யோகா பயிற்சியை வழி நடத்தினார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தினசரி யோகா செய்வதாகவும், இதனால் தான் அவரால் கடினமாக உழைக்க முடிவதாகவும் குறிப்பிட்டார்.
















