திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது - நயினார் நாகேந்திரன்
Jun 19, 2026, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2026, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது  என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு “வெள்ளை அறிக்கை” என்ற பெயரில் நிதியமைச்சர் மரிய வில்சன்  வெறும் கடன் பத்திரத்தை மட்டுமே வாசித்திருந்த நிலையில், தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதிகள் குறித்து சட்டமன்ற உரையில் நீங்களும் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.

கடனைக் காரணம் காட்டி கொடுத்த வாக்குறுதிகளைக் கிடப்பில் போடுவதற்கு நீங்கள் திட்டம் தீட்டுகிறீர்களோ எனத் தோன்றுகிறது.

காரணம், கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக எப்படியெல்லாம் சிதைத்து, மக்களின் தோள்களின் மீது கடன் சுமையைக் கூட்டி வைத்திருந்தது என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைக்கு வந்த தவெக புலனாய்வு செய்து இதைப் புதிதாகக் கண்டுபிடித்து விடவில்லை. பல அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வந்த வெட்ட வெளிச்சமான விஷயம். இவ்வளவு ஏன், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இதே பொருளாதாரக் கடனைச் சுட்டிக் காட்டி திமுகவை விமர்சித்தவர் தானே நீங்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் கடன் சுமையில் தவிக்கிறது என்று தெரிந்தும் கூட, முழுக்க முழுக்க பணபலத்தை மட்டுமே மையமாகக் கொண்ட திருமணத்திற்கு ஒரு பவுன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாதம் ரூ. 2500 மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கு ரூ. 4000 நிதியுதவி, பயிர்க்கடன் முழுவதுமான தள்ளுபடி என இத்தனை வாக்குறுதிகளை எதற்கு வாரி இறைத்தீர்கள்? மாற்றம் தருவோம் என மேடைக்கு மேடை எதற்கு முழங்கினீர்கள்? என்றும் அவர் கூறியுள்ளார்

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பித் தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் முதல்வரே, திமுக விட்டுச் சென்ற கடனைக் காரணம் காட்டி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் நீங்கள் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்..

Tags: nainar nagendran interviewWhite PaperBJP State President Nainar Nagendran nainar nagendran on epsmaria wilsonnainar nagendran press meetVijaytvkNainar Nagendran speechnainar nagendran statement
ShareTweetSendShare
Previous Post

யோகா செய்வதால் என்ன நன்மை? – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

Related News

யோகா செய்வதால் என்ன நன்மை? – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பொதுவேட்பாளர்?

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் – முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் எல்.முருகன் புகழாரம்3!

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரெங்கராஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

தாம்பரம் அருகே 4 மணி நேரம் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies