வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்.பி நவாஸ்கனி மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களின் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக 23 கோடியே 58 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
















