தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக இருந்த சீமா அகர்வாலின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து தீயணைப்புத் துறையின் புதிய டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்கடராமன், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
















