டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களுக்கான அனுமதி காலம், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2024-ம் ஆண்டு வழங்கப்பட்ட டாஸ்மாக் பார்களுக்கான அனுமதிக் காலம் நிறைவடைந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அது முதலில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது, புதிய விதிகளின் அடிப்படையில் டெண்டர் கோரும் நடவடிக்கைகள் மற்றும் பார்களில் உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அனுமதியை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஜூலை 2-ம் தேதி நடைபெறும் டாஸ்மாக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















