முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம், இடுக்கி அருகே நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அணை பலவீனமாக இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள எம்.பி.க்கள் வலியுறுத்திய நிலையில், அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்றும், புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
தென்னிந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
















