ஆதார் எண்ணுடன் இமெயில் முகவரியை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31 வரை கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுவரை, ஆதார் அடையாள அட்டையுடன் மின்னஞ்சலை சேர்ப்பதற்கு 75 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அந்த கட்டணம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இனி இலவசமாகவே தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொள்ளலாம். புதிய அறிவிப்புகள், சேவைகள் என பல்வேறு தகவல் குறித்தும் மின்னஞ்சல் மூலம் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
















