நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவ சேவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக மருத்துவர்கள் திகழ்வதாகவும், சவாலான சூழ்நிலைகளிலும் அவர்கள் மேற்கொள்ளும் சேவை மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மருத்துவ இடங்களும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், உயிரைக் காக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் பாராட்டத்தக்கது எனவும், அவர்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
















