காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது.
இதில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















