30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா - சிறப்பு தொகுப்பு!
Aug 26, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 8, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், உலகம் முழுவதும் சுமார் 30 தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை இழுத்து மூட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரானதுமே அரசு செலவீனங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு, 10க்கும் மேற்பட்ட தூதரக அலுவலகங்களை மூடியும், நூற்றுக்கணக்கான தூதரக அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தும் கடுமையான நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் எடுத்திருந்தது. கூடுதலாக 17 துணைத் தூதரகங்கள் மற்றும் மூன்று பிற ராஜதந்திர அலுவலகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக கனடாவின் வின்னிபெக் (Winnipeg) நகரில் உள்ள துணைத் தூதரகம், ஜப்பானின் நகோயா (Nagoya) நகரில் உள்ள துணைத் தூதரகம், இந்தோனேசியாவின் மேடான் (Medan) நகரில் உள்ள துணைத் தூதரகம், கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜஸ் (St. George’s) நகரில் உள்ள அமெரிக்க தூதரக மற்றும் கேமரூன் நாட்டின் துவாலா (Douala) நகரில் உள்ள தூதரகம்ஆகியவற்றை மூட முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அமெரிக்காவின் இந்த முடிவு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் சீனா தனது இராஜதந்திர இருப்பை விரிவுபடுத்தி வரும் வேளையில், தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவது மற்றும் செயலிழக்கச் செய்வது, ‘யுஎஸ் எய்ட்’ (US Aid) போன்ற திட்டங்களை ரத்து செய்வது மற்றும் நூற்றுக்கணக்கான தூதரக அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வது ஆகியவற்றின் மூலம் அதிபர் ட்ரம்ப், சர்வதேச அளவில் அமெரிக்காவின் இருப்பைக் குறைத்து வருகிறார்.

பட்ஜெட் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அதிபர் ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் ஏற்படும் வெற்றிடத்தை சீனா நிரப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவின் 271 தூதரக அலுவலகங்களுக்கு எதிராகச் சீனா உலகம் முழுவதும் 274 தூதரகங்களைச் செயல்படுத்திவருகிறது.

ஏற்கெனவே இந்திய -பசிபிக் மற்றும் மேற்கு ஆசியா போன்ற முக்கியமானபகுதிகளில் சீனா தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் அதிகரித்து வருகிறது.

அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை விட்டுக்கொடுத்து வருவதால், சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற முக்கியமான களங்களிலிருந்து அமெரிக்கா வெளியேறினால், அந்தப் பகுதிகள் சீனாவின் ஆதிக்கத்துக்குள் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

சொல்லப்போனால் ஒரே நேரத்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்படும் இச்செயல்பாடு இதற்கு முன்பு அமெரிக்காவால் முன்னெடுக்கப்படாத ஒன்றாகும். உலகில் தற்போது நடந்துவரும் எந்தவொரு நிகழ்வும் இதற்குக் காரணமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்திருந்த போதிலும் அதிபர் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

Tags: US President TrumpTrump administration"America First" policyembassies and consulates shoutdowngovernment spending cut
Share
Tweet
SendShare
Previous Post

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

Next Post

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

Related News

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies