சென்னையில் நடைபெற்ற தனியார் ஊடக விவாத நிகழ்ச்சியில், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய தவெக ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது நாற்காலி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முகப்பேர் பகுதியில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் தவெக ஆதரவாளராக நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். விவாதத்தின்போது திமுக மற்றும் அதன் தலைவர்களை அவர் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒருவர் நாற்காலியை நாஞ்சில் சம்பத் திசையை நோக்கி வீசியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
















