சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக, அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 2023-ம் ஆண்டு மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை உருவாக்கும் நோக்கில், மருத்துவப் படிப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், உயர்தர மருத்துவக் கருவிகளுக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, உள்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்களை உருவாக்க வேண்டும் என காமகோடி தெரிவித்துள்ளார்.
இதற்காக, மருத்துவர்களும் பொறியாளர்களும் ஒரே கூரையின் கீழ் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















